ரஷித் கானை நீக்கியது ஏன் - வௌியான உண்மை!

ரஷித் கானை நீக்கியது ஏன் - வௌியான உண்மை!

ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்ததால் ரஷித் கானைத் தக்கவைக்க முடியவில்லை என சன்ரைசர்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது.

ஐபிஎல் போட்டியில் எதிா்வரும் பருவத்துக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். டேவிட் வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே போன்ற பிரபல வீரர்களை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது.

டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெறாதது பற்றி அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி கே. ஷம்மி, ஸ்டார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இது மிகவும் கடினமான முடிவு. ஆனால் சம்பளத்தை முன்வைத்து ஒரு வீரர் ஏலத்தில் இடம்பெற விருப்பப்படும்போது அந்த முடிவை நாங்கள் மதிக்க வேண்டும். ஏலத்தில் சரியான தொகைக்கு ரஷித் கானைத் தேர்வு செய்ய முயற்சி செய்வோம் என்றார்.

2017 இல் ரூ. 4 கோடிக்கும் 2018 இல் ரூ. 9 கோடிக்கும் ரஷித் கானை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. அந்த அணிக்காக 76 ஆட்டங்களில் விளையாடி 93 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் ரஷித் கான்