பேருந்தில் இருந்து இறங்கமுற்பட்ட முதியவர் பரிதாபமாக சாவு!!

பேருந்தில் இருந்து இறங்கமுற்பட்ட முதியவர் பரிதாபமாக சாவு!!

வவுனியா நெடுங்கேணி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட முதியவர் கீழே வீழுந்து காயமடைந்திருந்த நிலையில் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்.குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணிப்பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது.

குறித்த முதியவர் அன்றயதினம்(8) வவுனியாவிலிருந்து பேருந்தில் பயணித்து நெடுங்கேணி பகுதிக்கு சென்றுள்ளார்.இதன்போது பேருந்தை நிறுத்தி இறங்கமுற்பட்போது தவறிகீழே விழுந்தநிலையில் படுகாயமடைந்துள்ளார்.

காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் சாவடைந்துள்ளார்.

சம்பபவத்தில் மதியாமடு பகுதியை சேர்ந்த கோபால் வயது 71 என்ற முதியவரே சாவடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.