யாழ்.தென்மராட்சியில் மணல் கள்ளர்களை சுற்றிவளைத்து பிடித்த இராணுவம்!
யாழ். தென்மராட்சி – பாலாவி பகுதியில் கள்ள மணலுடன் வந்த உழவு இயந்திரத்தை இராணுவத்தினர் கைப்பற்றிருக்கின்றனர்.
பாலாவி பகுதியில் கள்ள மணல் ஏற்றுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதிக்கு இராணுவத்தினர் சென்றனர்.
இதன்போது கள்ள மணல் ஏற்றிய உழவு இயந்திரத்திரம் மற்றும் இரு சந்தேக நபர்களை கைதுசெய்து கொடிகாமம் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025