ATM இயந்திரத்தை உடைத்த இருவர் - CCTV காணொளி

ATM இயந்திரத்தை உடைத்த இருவர் - CCTV காணொளி

ATM இயந்திரம் ஒன்றை உடைக்க முற்பட்ட இருவர் வெலிகட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராஜகிரிய பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றிற்கு முன்னாள் இருந்த குறித்த ATM இயந்திரத்தை ஆயுதங்களால் தாக்கி உடைக்க முற்பட்டமை அங்கிருந்த சிசிரிவியில் பதிவாகி இருந்தது.

குறித்த இயந்திரத்திற்கு ஏற்பட்ட சேதம் இதுவரையில் கணிக்கப்படவில்லை எனவும் கைது செய்யப்பட்ட இருவரும் கோட்டை நகர சபை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.