
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் இன்று
ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று (24) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (24) மாலை 6 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆளும் கூட்டணியின் சிரேஷ்ட பிரதிநிதி ஒருவர் இதனை எமது செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார்.
பாதீடு உள்ளிட்ட சில முக்கிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.