80 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

80 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராமநாதபுரம் அழகாபுரி பகுதியில் 80 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் கசிப்பினை பொதி செய்து மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லும் போது இராமநாதபுரம் பொலிசார் மறித்து சோதனையிட்ட போது மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 35 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் 45 லீற்றர் கசிப்பினை விற்பனைக்கு தயார் நிலையில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டஇருவரும் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.