பணிக்காக சென்றவர் சடலமாக மீட்பு

பணிக்காக சென்றவர் சடலமாக மீட்பு

மொறவக்க - பரணவத்த பகுதியில் கால்வாயொன்றிலிருநது நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பணிக்குச் சென்ற நபர் வீடு திரும்பாததையடுத்து, பிரதேசவாசிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போதே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.