சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 63 பேர் கைது
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் திருகோணமலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரச உளவு பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.