கொவிட் அனர்த்த நிலை இன்னும் குறையவில்லை - எச்சரிக்கும் அமைச்சர்!
கொவிட் மரணங்கள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தாலும், அது தொடர்பான அனர்த்த நிலை இன்னும் குறையவில்லை என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 2 கோடியே 70 இலட்சத்து 58,302 டோஸ் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களில் 01 கோடியே 46 இலட்சத்து 98,140 பேர் கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுள்ளதுடன், ஒரு கோடியே 23 இலட்சத்து 60,162 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் மேலும் ஒரு இலட்சத்து 17,587 டோஸ் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
(அரசாங்க தகவல் திணைக்களம்)