பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவர்களுக்கான பாடசாலைகளில் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.