
ஹெரோயின் மற்றும் வாளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 2.94 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள், கார் என்பன கைப்பற்றப்பட்டு சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு தலைமை பொலிஸ் அதிகாரி சி.ஐ.பிரான்சிஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று கைதானவர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டனர்.