உரும்பிராயில் கோரவிபத்து -இளம் குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே பலி

உரும்பிராயில் கோரவிபத்து -இளம் குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே பலி

உரும்பிராய் சந்திக்கு அண்மையாக நேற்றுமாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளம்குடும்பபெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் குரும்பசிட்டி வசாவிளானைச் சேர்ந்த அனோஜன் -கஜேந்தினி என்ற குடும்ப பெண்ணே உயிரிழந்தவராவார்.

உரும்பிராய் சந்திக்கு அண்மையில் இவர் சைக்கிளில் சென்றவேளை சைக்கிள் பட்டாவுடன் எதிர்பாராதவிதமாக மோதியுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.அவரது கணவர் படுகாயமடைந்தநிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.