4 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது
வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய முதலாவது வீதியில் சுமார் 4 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோனஹேன காவல்துறை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்
29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026