ஊரடங்கு தளர்வின் பின்னர் மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை - மதுவரி திணைக்களம்

ஊரடங்கு தளர்வின் பின்னர் மதுபானசாலைகளை திறக்க நடவடிக்கை - மதுவரி திணைக்களம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் சகல சில்லறை மதுபான நிலையங்களையும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நீண்ட காலத்திற்கு பின்னர் மதுபானசாலைகளை திறக்கப்படவுள்ளதால், அதிகளவான வாடிக்கையாளர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சுற்றிவளைப்புக்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.