
யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா நிலையை கருத்தில் கொண்டு வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று செப்டம்பர் 3ஆம் திகதி மீண்டும் பொறுப்பேற்கிறார்.
பிரித்தானியாவிற்கு மேற்படிப்புக்காக கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில் சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர்,வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.
எனினும் தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தியை பணிப்பாளர் பொறுப்பை ஏற்க சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டது.
அதற்கமைய அவர் தனது மேற்படிப்பை பிற்போட்டு, செப்டம்பர் 3ஆம் திகதி மீண்டும் தனது கடமைகளை மீளப் பொறுப்பேற்கவுள்ளார்.