தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான் சிறிய தேரில் வலம் வந்து மக்களுக்கு அருள்பாலித்தார்.

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாடு பூராகவும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதார அமைச்சினால் ஆலயங்களுக்கு என வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களோடு சிறப்பாக தேர் உற்சவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்