இலங்கைவரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய வழிகாட்டல் கோவை

இலங்கைவரும் வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய வழிகாட்டல் கோவை

இலங்கை வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இலங்கையர்கள் நாடு திரும்பும்போது, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் அனுமதியை பெறவேண்டியது அவசியம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் நாட்டை வந்தடையும்போது விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.