இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது

இலங்கைக்குள் நுழைய முற்பட்ட இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட நால்வர் கைது

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் இந்தியாவில் இருந்து இலங்கைக்குள் நுழைய முற்பட்ட நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களில் ஒருவர் அல்லைப்பிட்டியை சேர்ந்தவர் எனவும் ஏனைய 3 பேரும் இந்திய பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு சந்தேகநபர்கள் காரைநகர் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.