வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான சலுகை

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான சலுகை

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாத நாடுகளில் இருந்து கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை பெற்றுக் கொண்ட பயணிகளுக்கு இலங்கையில் நாளை முதல் புதிய நடைமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் அவர்களுக்கு இலங்கையில் மேற்கொள்ளப்படும் முதலாவது பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவில்லை எனின் அவர்களுக்கு 7 நாட்களின் பின்னர் மீண்டும் பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடைமுறை நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான சலுகை