கடவுச்சீட்டு வழங்குவதை வலுப்படுத்த தயாராகும் அரசாங்கம்

கடவுச்சீட்டு வழங்குவதை வலுப்படுத்த தயாராகும் அரசாங்கம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கும் செயல்முறையை மேலும் விரைவுபடுத்துவதற்கான பொறிமுறையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் அமைச்சர் விஜித ஹேரத்தின் தலைமையில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் தலைவர்களும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

தற்போதைய கடவுச்சீட்டு வழங்கும் பொறிமுறையைப் புதுப்பித்தல், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடவுச்சீட்டு வழங்கலின் வேகத்தை உறுதி செய்தல் குறித்து இந்தக் கலந்துரையாடல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்குவதை வலுப்படுத்த தயாராகும் அரசாங்கம் | Strengthen The Issuance Of Foreign Passports

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மிகவும் வசதியான சேவையை வழங்குவதில் குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.