பிரதமர் மஹிந்த வெளிப்படுத்திய ஆதங்கம்!

பிரதமர் மஹிந்த வெளிப்படுத்திய ஆதங்கம்!

அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம், அதற்காக அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அழைப்பு விடுத்துள்ளார். நடைமுறை அரசியலமைப்பில் உள்ள ஒரு சில உறுப்புரைகள் இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை. ஆகவே அரசியலமைப்பினை மாற்றுவதற்கும், அனைவருக்கும் பொருந்தும் வகையிலான அரசியலமைப்பினை உருவாக்குவதற்கு தற்போதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற முஸ்லிம் சமூத்தினருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம் மக்களுக்கும் எங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. என்னுடைய ஆட்சியியில் அமைச்சரவையில் 28 இற்கும் அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், இறுதியில் முஸ்லிம் மக்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்க்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் நாடு புதிய யுகத்தை நோக்கி பயணிக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அதன் பின்னர் எங்களுடைய கட்சியிலும் முஸ்லிம் தலைவர்கள் அங்கம் வகித்தார்கள். அவர்கள் எங்களுக்காக வாக்கு கேட்டுச் சென்ற நிலையும் காணப்பட்டது. ஆனால் சில சில முரண்பாடுகள் ஏற்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை உருவாக்கினோம். அதன் ஊடாக போட்டியிட்ட முதல் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம். ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு பயம் என்பதால் மாகாண சபையை காலவரையறையின்றி பிற்போட்டது. அதற்கு முஸ்லிம் தலைவர்களும் கட்சிகளும் உதவி செய்தனர். அதனால் முஸ்லிம் , தமிழ், சிங்கள மற்றும் கிறிஸ்தவ மக்கள் என அனைவரின் உரிமையும் இல்லாதொழிக்கப்பட்டது. அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகிறது. தற்போதுள்ள அரசியலமைப்பில் சில உறுப்புரைகள் மக்களை பிளவுப்படுத்துகின்றதே தவிர மக்களை ஒன்று சேர்க்கவில்லை. ஆகவே இந்த அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டிய காலம் தோன்றியுள்ளது. அதற்காக அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும். ஜனாதிபதியொருவர் தெரிவு செய்துள்ள நிலையில் நாட்டை கட்டியெழுப்புவதற்காக எங்களுடன் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியை கைப்பற்றுதவதற்கு விட ஸ்ரீகொதவை கைப்பற்றுவது முக்கியமாகவுள்ளது. இது மக்களுக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை. ஆகவே சிறந்த முறையில் சிந்தித்து செயற்படுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script><!-- yarlnews --><ins class="adsbygoogle"     style="display:block"     data-ad-client="ca-pub-6351278828785619"     data-ad-slot="1437470177"     data-ad-format="auto"     data-full-width-responsive="true"></ins><script>     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});</script>