நெடுந்தீவு மீனவாின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!

நெடுந்தீவு மீனவாின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!

தமிழகத்தின், வேதாரணியம் கடற்கரையில் இன்று காலை இலங்கை மீனவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

நெடுந்தீவு, 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சில்வஸ்டர் மரியதாஸ் என்ற மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் நெடுந்தீவிலிருந்து கட்டுமரம் ஒன்றில் கடற்தொழில் நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்றுள்ளார்.

எனினும் அவர் கடந்த ஒருவாரமாக கரை திரும்பியிருக்காத காரணத்தால் குடும்பத்தார் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்நிலையிலேயே, அவரது சடலம் தமிழகம் வேதாரணியம் கடற்கரையில் இன்று காலை மீட்கப்பட்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.