யாழில் பகல் வேளையில் கத்திக்குத்து! ஒருவர் படுகாயம்

யாழில் பகல் வேளையில் கத்திக்குத்து! ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கத்திக்குத்து தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று பிற்பகல் வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இத்தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீதே குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.