
Update - கரடியனாறு இராணுவ வாகன விபத்தில் இருவர் பலி: நால்வர் காயம்
மட்டக்களப்பு - கரடியனாறு- கறுப்பு பாலத்தின் ஊடாக இராணுவ வாகனம் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகரை இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
முந்தைய பதிவு...
மட்டக்களப்பு - கரடியனாறு- கறுப்பு பாலத்தின் ஊடாக இராணுவ வாகனம் ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 05 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சம்பவத்தில் காயமடைந்த 5 பேரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .