கொவிட் தொற்றுக்கு உள்ளான சிங்கம் பூரண குணம்

கொவிட் தொற்றுக்கு உள்ளான சிங்கம் பூரண குணம்

அண்மையில் கொவிட் தொற்றுக்கு உள்ளான தெஹிவல மிருக காட்சிசாலையில் இருந்த சிங்கம் பூரண குணமடைந்துள்ளதாக அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகள் மிருக காட்சிசாலையில் உள்ள மிருகங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தோர் எனும் 11 வயது சிங்கமே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி இருந்தது.