திம்புள்ள - பத்தன காவல்நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொவிட்!

திம்புள்ள - பத்தன காவல்நிலைய அதிகாரிகள் நால்வருக்கு கொவிட்!

ஹட்டன், திம்புள்ள - பத்தன காவல்நிலையத்தைச் சேர்ந்த 4 காவல்துறை அதிகாரிகளுக்கு இன்று கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

அதற்கமைய, குறித்த காவல்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்த 10 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக குறித்த காவல் நிலையத்தின் காவல்துறை பரிசோதகர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.