இறந்த நிலையில் கரையொதுங்கிய மற்றுமொரு கடலாமை

இறந்த நிலையில் கரையொதுங்கிய மற்றுமொரு கடலாமை

யாழ்ப்பாணம் - வேலணை துறையூர் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று கரையொதுங்கியுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதிவாழ் மீனவர்களால் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்கு வருகைதந்த அதிகாரிகள் கடலாமையை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக எடுத்துச்சென்றுள்ளனர்.

கரையொதுங்கிய கடலாமையின் நீளம் 28 அங்குலமும்,அகலம் 22 அங்குலம் எனவும் தெரிவித்துள்ளனர்.