
வடிகாலில் இருந்து செல் ஒன்று மீட்பு
யாழ்ப்பாணம் - ஸ்ரான்லி வீதியிலுள்ள வெள்ளவடிகால் இருந்து செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை யாழ் மாநகர பணியாளர்கள் துப்பரவுப் பணியை மேற்கொள்ளும்போது செல்லை இனங்கண்டு யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்தனர்.
பொலிஸார் குண்டினை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்ரான்லி வீதிக்கு அண்மையில் செல்லுகின்ற இதே பிரதான வெள்ள வடிகாலில் கொடிய விஷ பாம்புகள் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-யாழ். நிருபர் பிரதீபன்-
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025