தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய தகவல்!

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய தகவல்!

ஸ்ரீலங்காவின் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கான நேரம் ஒரு மணித்தியாலத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான கால எல்லையை ஒரு மணி நேரத்தால் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் காலை 07 மணி முதல் பிற்பகல் 04 மணி வரையில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லையை காலை 07 மணி முதல் பிற்பகல் 05 மணி வரை வரையில் நீடிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.