
திருமண நிகழ்வுகளில் இன்றைய தினம் தொடக்கம் அனுமதி
திருமண நிகழ்வுகளில் 50 வீதமானவர்கள் அல்லது 300 பேருக்கு குறைந்தளவான உறுப்பினர்கள் கலந்து கொள்ள இன்றைய தினம் தொடக்கம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.