சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் - பாதணிகள் சிக்கின!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 1.2 கோடி ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள் - பாதணிகள் சிக்கின!

மூன்று கொள்கலன்களின் மூலம் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விலையுயர்ந்த ஒரு தொகை அழகுசாதனப் பொருட்கள் மற்றும் பாதணிகளை கொழும்பு துறைமுகத்தில் சுங்கம் பறிமுதல் செய்துள்ளது.

சுங்க வருவாய் கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (28) பிற்பகல் குறித்த கொள்கலன்களை பரீட்சிக்கும் போதே அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அவற்றின் பெறுமதி சுமார் 1.2 கோடி ரூபா என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பொருட்களை இறக்குமதி செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்க ஊடக பேச்சாளர், பிரதி சுங்க பணிப்பாளருமான சுதத் டி சில்வா தெரிவித்தார்