3 மாவட்டங்களின் 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்
நாட்டில் கொவிட்-19 பரவல் காரணமாக 3 மாவட்டங்களில் 5 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
மொனராகலை, அம்பாறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம சேவகர்கள் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய நகர சபை எல்லை, வெஹேரயாய மற்றும் கொட்டம்கஹாபொக்க கிராம சேவகர் பிரிவிலும் புத்தல பிரதேசத்தின் ராஹாதன்கம கிராம சேவகர் பிரிவும், உஹன பிரதேசத்தின் குமாரிகம கிராம சேவகர் பிரிவும் மாத்தளை மாவட்டத்தின் அலுகொல்ல கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்