நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மூடப்பட மாட்டாது - கபில பெரேரா
கொவிட்-19 ஐ தடுக்கும் ஜனாதிபதி செயலணி தமது தீர்மானத்தை அறிவிக்கும் வரையில் பாடசாலைகள் தொடர்ந்தும் நடத்திச் செல்லப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட முறைமைக்கமைவாக தொடர்ந்தும் அவை நடத்திச்செல்லப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மூடாமல், அந்தந்த பகுதிகளின் நிலைமையினை கருத்திற்கொண்டு பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவுடன் கலந்துரையாடி அதிபர்களால் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்