சகோதரனை பொல்லால் தாக்கி கொன்ற சந்தேகநபர் தலைமறைவு

சகோதரனை பொல்லால் தாக்கி கொன்ற சந்தேகநபர் தலைமறைவு

மினுவாங்கொடை- வட்டினபஹா பிரதேசத்தில் நேற்று (25) சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

32 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது குறித்த நபர் 27 வயதான தனது சகோதரனால் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் சந்தேகநபர் அப்பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்