
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 177 பேர் கைது!
நாடு முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 177 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்