சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

சில பிரதேசங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று (26) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பொது மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது