
யாழ் - பொலிகண்டியில் வெடிபொருட்கள் மீட்பு
இன்று சனிக்கிழமை யாழ் - பொலிகண்டி புதுவளவு என்ற இடத்திலேயே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெடிபொருள்களை செயலிழக்க வைப்பதற்கான தொழில்நுட்பத் திறன் தொடர்பில் கண்டறியப்படாத நிலையில் சிறப்பு அதிரடிப்படையின் உயர்மட்டப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வருகைக்காக காத்திருப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.