நிரம்பி வழியும் ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு! கொழும்பின் ஆபத்தான நிலை

நிரம்பி வழியும் ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு! கொழும்பின் ஆபத்தான நிலை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.

அந்த வகையில் இன்று (21) 150 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

மார்ச் மாதத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோதிலும், கடந்த வாரம் முதல் இந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

மேலும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவுகள் இரண்டும் நிரம்பியுள்ளன என்றும் வைத்தியர் தெரிவித்தார்.