
சிறை அதிகாரிகள் மீது மிளகாய் பொடியை தூவி 16 கைதிகள் தப்பியோட்டம்!
இந்தியாவின் ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மாவட்டத்தின் பலோடி நகரிலுள்ள கிளை சிறைச்சாலையொன்றின் சிறைக்கைதிகள் 16 பேர் தப்பியோடியுள்ளனர்.
இவர்கள் சிறை அதிகாரிகள் மீது மிளகாய் தூள் மற்றும் காய்கறிகளை சிறைக்காவலர்கள் மீது வீசித் தப்பிச்சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், தப்பிச் சென்ற கைதிகளை தேடிக் கண்டுபிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதேவேளை, சிறைக்கைதிகள் தப்பிச்செல்ல சிறையிலுள்ள உத்தியோகத்தர்கள் சிலர் உதவியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்