வட - கிழக்கில் 3 விசேட பொருளாதார மத்திய நிலையங்கள்

வட - கிழக்கில் 3 விசேட பொருளாதார மத்திய நிலையங்கள்

மட்டக்களப்பு, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை திறப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதி வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களின் விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் கட்டுமானப்பணிகள் தற்போது நிறைவுப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தின் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் முதற்கட்ட கட்டுமானப்பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முறையான பொறிமுறையை பின்பற்றி குறித்த பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபார அலகுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது