இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

இஸ்ரேலிய பிரதமருக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பம்

கையூட்டல் மற்றும் மோசடி குற்றச்சாட்டிற்கு உள்ளான இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தியாகுவிற்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நீதிமன்றத்தில் பிரதமர் பிரசன்னமான நிலையில் முதலாவது சாட்சி இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

கையூட்டல், மோசடி, நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டின் கீழ் மூன்று வழக்குகள் பதிவாகியுள்ளன.

எனினும் தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கடந்த பெப்ரவரி மாதம் இஸ்ரேலிய பிரதமர் மறுத்திருந்தார்