விஷமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டு பூங்கா புனரமைப்பு வேலைகள் உடன் ஆரம்பம்

விஷமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டு பூங்கா புனரமைப்பு வேலைகள் உடன் ஆரம்பம்

விஷமிகளால் எரியூட்டப்பட்ட நல்லூர் கிட்டு பூங்காவின் முகப்பு பகுதியில் மீளவும் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவு நேரம் இந்த முகப்பு விஷமிகளால் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் எரியூட்டப்பட்ட முகப்பு பகுதியின் புனரமைப்பு பணிகளை உடனடியாக யாழ்.மாநகர சபை ஆரம்பித்து தற்போது யாழ்.மாநகர சபை பணியாளர்களினால் குறித்த வேலைகள் இடம் பெற்று வருகின்றன.