பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவல்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 86 பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 111 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட பாடங்களுக்கான மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.