
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,52,647 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பரவி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. தினசரி பாதிப்புகள் 50 ஆயிரத்தை கடந்ததுடன், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,08,910 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 291 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,95,023 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 30,386 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,52,647 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 5,81,09,773 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.