சிறிதரன் எம்.பியின் வீட்டில் இனந்தெரியாத குழு தாக்குதல்! (காணொளி,படங்கள்)

சிறிதரன் எம்.பியின் வீட்டில் இனந்தெரியாத குழு தாக்குதல்! (காணொளி,படங்கள்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின், இல்லத்தில் இன்று(26) பிற்பகல் இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

குறித்த தாக்குதல்  இடம்பெற்ற காட்சிகள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளன.

உந்துருளிகளில் சிறிதரனின் இல்லத்திற்கு பிரவேசித்த 8 பேர் கொண்ட இனந்தெரியாத குழு, அவரின் மகன்மீது தாக்குதலை நடத்தி, தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்