திருநெல்வேலி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடல்

திருநெல்வேலி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடல்

24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, யாழ்ப்பாணம் - நல்லூர் - திருநெல்வேலி பொதுச்சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் இன்று 44 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.