வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரும் ராஜித -சத்துர

வாக்குமூலம் வழங்க பிறிதொரு தினத்தை கோரும் ராஜித -சத்துர

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இன்று(19) அழைக்கப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், அவரது புதல்வரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவும், அதற்காக பிறிதொரு தினத்தைக் கோரியுள்ளனர்.

தாம் கடத்தப்பட்டதாக, இணைய ஊடகர் ஒருவர் தாக்கல் செய்த போலியான முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்கே அவர்கள் இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

போலியான முறைப்பாட்டை வழங்கிய குறித்த நபர், சம்பவம் இடம்பெற்ற தினத்தில், சத்துர சேனாரத்னவின் காரியாலயத்திற்கு சென்று, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடியதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், அவரது புதல்வரான சத்துர சேனாரத்னவும், கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எனினும், இன்று அவர்கள் அங்கு முன்னிலையாகாத காரணத்தினால், எதிர்வரும் திங்கட்கிழமை பிரசன்னமாகுமாறு அவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்