கதிர்காமம் பகுதியில் 29 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கதிர்காமம் பகுதியில் 29 கிலோ கேரள கஞ்சா மீட்பு

கதிர்காமம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 29 கிலோ 329 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவ்வாறு கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்