கொட்டாஞ்சேனை மருத்துவ களஞ்சியசாலையில் கொள்ளையிட்ட மூவர் கைது

கொட்டாஞ்சேனை மருத்துவ களஞ்சியசாலையில் கொள்ளையிட்ட மூவர் கைது

கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள மருத்துவ களஞ்சியசாலை ஒன்றில் நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்ளையிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது 7 லட்சத்து 48 ஆயிரத்து 440 ரூபா பெறுமதியுடைய மருத்துகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு 13, ஆட்டுப்பட்டி தெரு மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்த 32, 35 மற்றும் 43 வயதுகளை உடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்