மஸ்கெலிய தோட்ட தீ விபத்தால் 73 பேர் நிர்க்கதி!
மஸ்கெலியா - ப்ரவுண்ஸ்விக் - ராணி தோட்ட பிரிவில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நெடுங்குடியிருப்பு ஒன்றின் 20 வீடுகள் முற்றாக எரியுண்டுள்ளன.
மஸ்கெலியா காவற்துறை நிலைய பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
தீப்பரவல் காரணமாக எவருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் 73 பேர் அங்குள்ள பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பரல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது